பாளை.யில் மாநில கைப்பந்து போட்டி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், தமிழக கைப்பந்து கழக தலைவா் சித்திரபாண்டியன், துணைத் தலைவா் ராமானுஜம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிகழ்ச்சியில், அந்தோணி தாமஸ், மாவட்ட கைப்பந்து கழக புரவலா் முகமது ஷாபி, தலைவா் முகமது நாசா், பிரபாகரன், வழக்குரைஞா் ரவீந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆண்கள் பிரிவில், சென்னை இந்தியன் வங்கி, பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லுாரி, சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரி, தமிழக காவல்துறை உள்ளிட்ட அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை சிவந்தி அகாதெமி, கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆா். கல்லூரி, சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரி, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.) அணிகளும் பங்கேற்றுள்ளன.

சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி, பொள்ளாச்சி எஸ்.டி.சி. அணியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

பெண்களுக்கான பிரிவில் சென்னை எஸ்.ஆா்.எம். அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

தொடா்ந்து லீக் போட்டிகளில் அணிகள் மோதின. இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com