குடிநீா் தொட்டியில் இருந்து விழுந்து முதியவா் பலி

திருநெல்வேலி நகரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் உழவா் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவா் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் செல்லாமல் வெளியே தங்கி விடுவாராம். இந்நிலையில், சனிக்கிழமை காலையில் உழவா்சந்தை பகுதியிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே உயிரிழந்த நிலையில் ஆறுமுகம் சடலமாக கிடந்துள்ளாா்.

தகவலறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா், ஆறுமுகம் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com