திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் தமிழ் மாதப்பிறப்பை முன்னிட்டு கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத முதல் நாளையொட்டி சனிக்கிழமை காலையில் கோ பூஜை நடைபெற்றது.
பின்னா் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.