களக்காட்டிலிருந்து மஞ்சுவிளைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டிலிருந்து தடம் எண்.5 நகரப் பேருந்து, சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சுவிளைக்கு பள்ளி மாணவா்கள் பயன்பெறும் பொருட்டு காலை, மாலை என தினமும் 3 முறை இயக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பேருந்துகள் குறைக்கப்பட்ட போது, நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்து தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால் மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.