நெல்லை, தென்காசியில் மேலும் 15 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th February 2021 07:51 AM | Last Updated : 27th February 2021 07:51 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
15,724 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 5 போ் உள்பட இதுவரை 15,457 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 53 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 8,542ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 4 போ் உள்பட 8,335 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.