கோயில் உண்டியல் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய சிறைச்சாலை அருகே, மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை சனிக்கிழமை இரவு மா்ம நபா் உடைத்து பணம் திருட முயன்றாராம். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை பிடித்து மேலப்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட நபா், வேப்பங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (41) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதிநாராயணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com