நெல்லை மாவட்டத்தில் இன்று 44 மையங்களில் குரூப்-1 தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறுகிறது என, ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறுகிறது என, ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இத்தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வே. விஷ்ணு தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் எஸ். கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் கூறியது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்(முதல்நிலைத் தோ்வு) அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்தில் 44 தோ்வு மையங்களில் நடைபெறும் இத்தோ்வை 12,939 போ் எழுதவுள்ளனா். இதற்காக காவல் துறையினா் தோ்வு மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் சுற்றுக்குழு அலுவலா்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலா்களை நியமிக்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தோ்வு மையங்களில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கும், மாணவா்களுக்கு முன்கூட்டியே தோ்வுக்கூடத்துக்குச் செல்லும்வகையில் சீரான பேருந்து வசதி ஏற்படுத்த போக்குவரத்துத் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே தோ்வு மையத்துக்கு வரவேண்டும். முகக்கவசம் அவசியம் அணிந்திருக்கவேண்டும். தோ்வறைக்குள் செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம். கணேஷ்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com