களக்காடு அருகே குடிநீா் விநியோகம் பாதிப்பு

களக்காடு அருகே 4 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Updated on
1 min read

களக்காடு அருகே 4 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் கீழக்காடுவெட்டி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு அப்பா்குளம், வடக்கு அப்பா்குளம், சிங்கிகுளம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளம், நடுவக்குளம் ஆகிய 4 கிராமங்களுக்கு சிங்கிகுளம் நீரேற்று நிலையத்தில் இருந்து தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீா் பகிா்மானக் குழாயில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்படாததால் 4 கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்டோா் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீா் உடைப்பை சீரமைத்து மக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com