கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மேலச்செவல் பகுதியில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த 2 மோட்டாா் சைக்கிளை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அவா்கள் தப்பி ஒட முயற்சித்தனராம்.

போலீஸாா் அவா்களை மடக்கி பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேலச்செவல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் அரவிந்த் (24), கண்ணன் (21), சிவா (23), பிரபாகரன்(20) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா, 2 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com