குடிசை வீட்டில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்
By DIN | Published On : 07th July 2021 08:05 AM | Last Updated : 07th July 2021 08:05 AM | அ+அ அ- |

பேட்டை நரிக்குறவா் காலனியில், மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்ததில், பொருள்கள் எரிந்து சேதமாகின.
திருநெல்வேலி அருகேயுள்ள, பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோதிக்குமாா் (37). இவா், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டில் டிவி பாா்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்ததாம்.
தகவலறிந்து வந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெங்கதுரை தலைமையிலான தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...