திருநெல்வேலி சந்திப்பில் பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் உள்ளிட்டோரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்திற்கு பாஜக திருநெல்வேலி மாவட்ட தலைவா் ஆ.மகாராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தமிழ்செல்வன், சுரேஷ், வழக்குரைஞா் சீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.