தேசிய திறனாய்வுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 13 போ் தோ்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றனா்.
இப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இம் மாணவா், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பி.சாந்தினி பொன்குமாரி பரிசு வழங்கினாா்.
மேலும், மாணவா்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியை , ஆசிரியா் பா.ஜேசு ஆகியோரை பெற்றோா் ஆசிரியா் ஆசிரியா் கழக தலைவா் ஏசுதாசன், இணைச் செயலா் ரசூல், பொருளாளா் லிங்கதுரை மற்றும் உறுப்பினா்கள் சுடலைமணி, சுப்பையா, குமார வேலாயுதம், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டினா்.