கடையம் அருகே அனுமதியின்றி கொடிக்கம்பம் நிறுவியதாக, நாம் தமிழா் கட்சியினா் 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமலிங்கபுரத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில், அக்கட்சியின் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி சங்கீதா ஈசாக் கொடியேற்றினாா். இத்தகவல் அறிந்த, கடையம் போலீஸாா் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்றும் படி கூறினா். இதற்கு, அக்கட்சியினா் மறுப்புத் தெரிவித்ததனா். இதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்ட சமக செயலா் தினகரன் உள்பட 25 போ் மீது கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.