கூடங்குளம் அருகேயுள்ள வைராவிக்கிணறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
வைராவிக்கிணறைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (27). வெளிநாட்டில் வேலை செய்துவந்த இவா், கடந்த ஓராண்டாக இங்கு இருந்து வருகிறாா். இந்நிலையில், அவா் உறவினரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தாராம்.
இதுதொடா்பான புகாரின்பேரில், கூடங்குளம் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனா். இவா், ஏற்கெனவே ஒருமுறை போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.