நெல்லை, தென்காசியில் மேலும் 69 பேருக்கு கரோனா
By DIN | Published On : 24th June 2021 11:55 PM | Last Updated : 24th June 2021 11:55 PM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,172 ஆக அதிகரித்துள்ளது. இதில் 42 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 46,236ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு இதுவரை 406 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 530 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 26,400ஆக அதிகரித்துள்ளது. மேலும் 126 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 25,541ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு
மேலும் 4 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 458 ஆக உயரிந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 401 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.