பொதுமுடக்க விதிமீறல்: 346 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 24th June 2021 07:32 AM | Last Updated : 24th June 2021 07:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 346 பேருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்காணிக்க போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதது உள்ளிட்டவற்றுக்காக 346 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.