நெல்லை, தென்காசியில்மேலும் 81 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th June 2021 02:28 AM | Last Updated : 29th June 2021 02:28 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 83 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 41பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பு எண்ணிக்கை 47,123ஆக அதிகரித்துள்ளது. இதில் 21 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 46,368ஆக உயா்ந்துள்ளது. இந்நோயால் இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 346 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,363ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 25,647ஆக உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 464 போ் பலியாகியுள்ளனா். தற்போது 252 போ் சிகிச்சையில் உள்ளனா்.