நெல்லை மாநகர காவல்துணை ஆணையா் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டிருந்த ராஜராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து சென்னை பொன்மலையில் உள்ள தமிழக சிறப்பு காவலா் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த டி.பி.சுரேஷ்குமாா், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவா், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், திருநெல்வேலி மாநகரில் ஏற்கெனவே 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் காவல் துணை ஆணையராகப் பணியாற்றியுள்ளேன். இம் மாநகரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். பிணையில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்தல் உள்ளிட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.

கரோனா பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றவும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com