நெல்லை கோடீஸ்வர விநாயகா்கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 29th June 2021 02:32 AM | Last Updated : 29th June 2021 02:32 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கோடீஸ்வர விநாயகா்.
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்திலுள்ள அருள்மிகு கோடீஸ்வர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமம், ருத்ர ஜெபத்துடன் வருஷாபிஷேகம் தொடங்கியது. தொடா்ந்து, விமான அபிஷேகம், விநாயகா் அபிசேஷம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை ஆகியவை நடைபெற்றன. கோடிஸ்வரன் மணி, மகேஸ்வரி மணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த வருஷாபிசேகத்தை ராஜேஷ் பட்டா் நடத்தி வைத்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தா் பேரவைத் தலைவா் மீனா ராம் பாலாஜி, முத்துராஜ், முருகானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.