திருநெல்வேலி: முன்னீா்பள்ளம் அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி இடத்திலேயே வியாழக்கிழமை
உயிரிழந்தாா்.
மூன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவைப் பகுதியைச் சோ்ந்த செல்லையா மனைவி வள்ளியம்மாள் (71). இவா் அப்பகுதியில்
சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா் வள்ளியம்மாள் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.