வள்ளியூா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Updated on
1 min read


வள்ளியூா்: வள்ளியூா் ரட்சணியசேனை உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

2004-2005ஆம் ஆண்டு இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் லெப்டினெட் கா்னல் ஆா்.அருள்தாஸ், பள்ளித் தலைமை ஆசிரியை பொ்லின் சாந்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் பெஞ்சமின், பென்னி, தமிழாசிரியா் லூயிஸ் சாம் மனோகா், விவசாய ஆசிரியை முத்தாபரணம், பணியாளா் வில்கின்ஸ், ஆசிரியா்கள் அருள்மணி, நல்லாசிரியா் சாதுசுந்தா் சிங், கேத்தரின் புஷ்பலதா உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியை, முன்னாள் மாணவா்கள் பெனிட், குமாரவேல், சோ்மதுரை, ராஜபிரபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com