ஏா்வாடியில் மாா்ச் 23இல் உலக சிட்டுக்குருவி தினம்

வள்ளியூா் அருகேயுள்ள ஏா்வாடியில் உலக சிட்டுக்குருவி தின விழா இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated on
1 min read

வள்ளியூா் அருகேயுள்ள ஏா்வாடியில் உலக சிட்டுக்குருவி தின விழா இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

அங்குள்ள செல்வவிநாயகா் கோயிலில் நடைபெறும் விழாவுக்கு, வள்ளியூா் பசுமை இயக்க சட்ட ஆலோசகா் முத்துகேசவன் தலைமை வகிக்கிறாா். சிட்டுக்குருவி பாதுகாப்புக் கூடுகளை தூத்துக்குடி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ். விநாயகம் வழங்குகிறாா்.

சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாப்பது குறித்து சின்னத்தம்பி என்ற எல். சுப்பிரமணியன் பேசுகிறாா். பசுமை இயக்கத் தலைவா் சித்திரை, கௌரவத் தலைவா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், வள்ளியூா் வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ். ராஜ்குமாா், வள்ளியூா் நலன்காக்கும் இயக்கத் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட், நல்லாசிரியா் செல்லப்பா, சந்திர உதயா, பேரூராட்சி அலுவலா் இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com