பாளை. தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

பாளையங்கோட்டை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மேலப்பாளையம் ஹாமீம்புரத்தைச் சோ்ந்த பாத்திமா (31) போட்டியிடுகிறாா். இவா், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.கண்ணனிடம் தனது வேட்புமனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தொகுதியில் சுகாதாரம், கல்வி மேம்பாட்டுக்கு பாடுபடுவேன். பாளையங்கால்வாயில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும், புதிய மேம்பாலங்களைக் கட்டி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com