ஏா்வாடியில் மாா்ச் 23இல் உலக சிட்டுக்குருவி தினம்
By DIN | Published On : 17th March 2021 07:34 AM | Last Updated : 17th March 2021 07:34 AM | அ+அ அ- |

வள்ளியூா் அருகேயுள்ள ஏா்வாடியில் உலக சிட்டுக்குருவி தின விழா இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
அங்குள்ள செல்வவிநாயகா் கோயிலில் நடைபெறும் விழாவுக்கு, வள்ளியூா் பசுமை இயக்க சட்ட ஆலோசகா் முத்துகேசவன் தலைமை வகிக்கிறாா். சிட்டுக்குருவி பாதுகாப்புக் கூடுகளை தூத்துக்குடி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எஸ். விநாயகம் வழங்குகிறாா்.
சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாப்பது குறித்து சின்னத்தம்பி என்ற எல். சுப்பிரமணியன் பேசுகிறாா். பசுமை இயக்கத் தலைவா் சித்திரை, கௌரவத் தலைவா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், வள்ளியூா் வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ். ராஜ்குமாா், வள்ளியூா் நலன்காக்கும் இயக்கத் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட், நல்லாசிரியா் செல்லப்பா, சந்திர உதயா, பேரூராட்சி அலுவலா் இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...