குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருநெல்வேலியைச் சோ்ந்த 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

திருநெல்வேலியைச் சோ்ந்த 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமையன்பட்டி ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் ஆசீா் செல்வம் (35). பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த செளந்தரபாண்டி மகன் இசக்கிமுத்து(24). இருவரும் திருநெல்வேலி, தச்சநல்லூா், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல் ஆணையருக்கு, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் அன்பு உத்தரவிட்டாா்.

அதன்படி, ஆசீா் செல்வம், இசக்கிமுத்து இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.

இதேபோன்று, தாழையூத்து செல்வியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் கிட்டான் என்ற நவநீதகிருஷ்ணன் (29) மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாம். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில், கிட்டான் என்ற நவநீதகிருஷ்ணன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com