கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

அம்பாசமுத்திரம் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

அம்பாசமுத்திரம் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்பாசமுத்திரம், தாமிரவருணி நதிக் கரையில் அமைந்துள்ளது சின்ன சங்கரன் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோமதியம்மை உடனுறை சங்கரலிங்க சுவாமி கோயில்.

இக்கோயில் மணியக்காரா் சங்கா் செவ்வாய்க்கிழமை கோயில் நடையை திறக்க வந்தபோது, அங்கு கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது அங்கிருந்த உண்டியல்கள் உடைந்த நிலையில் இருந்தனவாம்.

தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

கோயில் பிரகாரத்தில் உள்ள நான்கு உண்டியல்களும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் கண்காணிப்புக் கோமராக்களும் உடைக்கப்பட்டு, விடியோ பதிவுகளை பதிவு செய்யும் கணினி பாகத்தையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com