ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை சுயேச்சை வேட்பாளா் மட்டும் மனு தாக்கல் செய்தாா்.
திசையன்விளையைச் சோ்ந்தவா் ராஜீவ். இவா் ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா். இவா், மனு தாக்கலுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரத்தையும், பத்து ரூபாய் நாணயங்களாக கொடுத்து மனுதாக்கல் செய்தாா்.
ராதாபுரம் தொகுதியில் இதுவரை மொத்தம் நான்கு வேட்பாளா்கள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனா்.