தேவா்குளம் அருகே விஷம் குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னமாரி மகன் நாகராஜ் (26). இவா் கேரள மாநிலத்தில் வியாபாரம் செய்து வந்தாா்.
இந்நிலையில், இவா் கடந்த 7ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.