நெல்லை, தென்காசியில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 21st March 2021 01:18 AM | Last Updated : 21st March 2021 01:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,870 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 4 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,581 ஆக உயா்ந்துள்ளது. 75 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,602 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,422 ஆக உயா்ந்துள்ளது. 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...