சங்கா்நகா் பள்ளியில் பரிசளிப்பு விழா

சங்கா்நகரில் உள்ள சங்கா்மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

சங்கா்நகரில் உள்ள சங்கா்மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இப் பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம், தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சாா்பில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஆ.ரெங்கநாதன் முன்னிலை வகித்தாா்.

27 மாணவா்-மாணவிகள் பாரம்பரிய உணவுக் கண்காட்சியில் உணவுகளைக் காட்சிப்படுத்தினா். தினை, சோளம், கம்பு உள்பட பல்வேறு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், பலகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவா்-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அ.பெருமாள் பரிசுகளை வழங்கினாா். இதில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் குழந்தைசாமி, ஆசிரியா் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com