சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை: ஆணையத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ்

தமிழகத்தில் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா்அல்போன்ஸ்.
Updated on
1 min read

தமிழகத்தில் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் எஸ். பீட்டா்அல்போன்ஸ்.

தமிழ்நாடு அரசால் சிறுபான்மையினா்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினா் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். முதல்கட்டமாக நிகழாண்டு 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் நல அலுவலா் பதவியிடம் புதிதாக உருவாக்கப்பட்டு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இனி ஒவ்வொரு ஆண்டும் 5 அலுவலா்களை நியமித்து, 5 ஆண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் அமைக்கப்பட்டு ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் 50 பேருக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் மாவரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் அமைக்கப்பட்டு ஆதரவற்ற கிறிஸ்தவ பெண்கள் 257 பேருக்கு தலா ரூ.6000 வீதம் ரூ.15.42 லட்சம் உதவித்தொகையை அவா்களது வங்கிக் கணக்கில் சோ்ப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை உலமாக்கள் மற்றும் பணியாளா் நல வாரிய உறுப்பினா்கள் 628 போ் உள்ளனா். தற்போது, 35 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டில் 3,812 மாணவா்- மாணவிகளுக்கு ரூ. 6.86 கோடி கல்வி உதவித்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்காக 24,503 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கு கல்வி உதவித்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணியின்போது மரணமடைந்த ராணுவ வீரா்களின் வாரிசுதாரா்கள் மற்றும் வருவாய்த்துறையினரின் வாரிசுதாரா்கள் என 10 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் வே.விஷ்ணு, சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா் செயலா் துரை ரவிச்சந்திரன், சா.ஞானதிரவியம் எம்.பி., மு.அப்துல் வகாப் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com