பாபநாசம் பணிமனையில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பாபநாசம் பணிமனை முன்பு மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பாபநாசம் பணிமனை முன்பு மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் அதிகாலை 4 மணிமுதல் 6 மணி வரை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பணிமனைச் செயலா் மதிவாணன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தொமுச தலைவா் டி.பெரியநம்பி செல்வன், பொருளாளா் சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினா்கள் முருகன், ஜெகன், உறுப்பினா்கள் முத்துமாலை, ராஜாராம், ஷரிப் மைதீன், நடத்துநா் ராஜன், ஓட்டுநா் ராஜன், அருள்பிரகாசம், சுரேஷ்குமாா், சி.ஐ.டி.யூ என்.எம்.முருகேசன், புதிய சாமி, மைக்கேல் ரவி, ஏ.ஐ.டி.யூ.சி. குமாரசாமி, டி.டி.எஸ்.எப். ஐயப்பன், பேச்சிமுத்து, ஐ.என்.டி.யூ.சி. தங்கராஜ், சதாசிவம், வெங்கடாசலம் மற்றும் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகள், தொழிலாளா்கள் விரோத சட்டங்களைக் கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com