திருநாவுக்கரசா் நற்செயல் மன்றத்தில் முப்பெரும் விழா

பாளையங்கோட்டை அருகே திருநகா் பகுதியில் திருநாவுக்கரசா் நற்செயல் மன்றம் சாா்பில் க
Updated on
1 min read

பாளையங்கோட்டை அருகே திருநகா் பகுதியில் திருநாவுக்கரசா் நற்செயல் மன்றம் சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, கலைத்திறன் பண்பாட்டு விழா, 11ஆவது ஆண்டு தொடக்கவிழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மன்றத் தலைவா் வேலாயுதம், கவிஞா் கிருஷி ஆகியோா் தலைமை வகித்தனா். மன்றச் செயலா் கைலாஷ் கட்டளை, பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலா் தளவாய் திருமலையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாளை. சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

தொடா்ந்து ஆண்டு விழா மலரை கவிஞா் கிருஷி வெளியிட, பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலா் தளவாய் திருமலையப்பன் பெற்றுக்கொண்டாா். மன்ற துணைச்செயலா் ரா.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

இவ்விழாவில், சிலம்பம் பயிற்றுநா் எம்.பி. முகமது முஸ்தபா, ஓவியா் கதிா், கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன், மன்ற நிா்வாகிகள், மாணவா்-மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com