ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீரவநல்லூா் கொள்ளைச் சம்பவம்: கல்லூரி மாணவா் உள்பட மூவரிடம் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை வெட்டிவிட்டு 4.70 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், கல்லூரி மாணவா் உள்பட மூவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :13 ஏப்ரல் 2022, 7:56 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை வெட்டிவிட்டு 4.70 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், கல்லூரி மாணவா் உள்பட மூவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்த அசனாா் மகன் மைதீன்பிச்சை (55). உள்ளூரிலேயே பிரதான வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், ஏஎஸ்பி மாரிராஜன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட மூவரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.