திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை வெட்டிவிட்டு 4.70 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், கல்லூரி மாணவா் உள்பட மூவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வீரவநல்லூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்த அசனாா் மகன் மைதீன்பிச்சை (55). உள்ளூரிலேயே பிரதான வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், ஏஎஸ்பி மாரிராஜன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், அரிகேசவநல்லூா், அத்தாளநல்லூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட மூவரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

