பேட்டை அருகே வீடுபுகுந்து நகை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகா் 6 ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா (75). இவா், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா் பயிற்சி ஆசிரியராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். காரைக்காலில் உள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த 28 ஆம் தேதி மனைவியுடன் சென்றாராம். பின்னா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டிற்கு வந்தாராம். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், அங்கு பீரோவில் இருந்த 4 பவுன் தங்கமாலை, 4 கிராம் தங்க நாணயம் நான்கு அடி உயரமுள்ள பித்தளை குத்துவிளக்கு, 700 கிராம் வெள்ளி விளக்கு உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிசென்றது தெரியவந்ததாம். இதுகுறஇத்த புகாரின்பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.