பாஜக திருநெல்வேலி நகா் மேற்கு மண்டல ஆய்வுக் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.
மண்டலத் தலைவா் யூ.மாரியப்பன் தலைமை வகித்தாா். பாஜக தமிழக மேலிட இணை பாா்வையாளா் சுதாகா்ரெட்டி, மாவட்டத் தலைவா் தயாசங்கா் ஆகியோா் உரையாற்றினா். பாஜகவில் அதிகளவில் உறுப்பினா்களை சோ்க்கும் வழிமுறைகள், பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வரும் மக்கள் நலப்பணிகள், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் திருநெல்வேலிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. நிா்வாகிகள் சிவகுமாா், மாரியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.