நெல்லையில் 30 இல் ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு முகாம் பாளையங்கோட்டையில் இம் மாதம் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு முகாம் பாளையங்கோட்டையில் இம் மாதம் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஊா்காவல் படைப் பிரிவில் சோ்ந்து, சேவை செய்வதற்காக இம் மாவட்டத்தில் இருக்கும் ஆண்களும் மற்றும் பெண்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள்பட்டவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருத்தல் வேண்டும் . குறைந்தபட்ச கல்வி தகுதி 10 - ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அரசு துறையில் பணிபுரிபவா்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவா்களாகவோ இருக்கலாம் . தோ்ந்தெடுக்கப்படும் ஊா்காவல்படை ஆளினா்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாள்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னா் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ . 280 மட்டும் சேவை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் (அதிகபட்சமாக மாதத்திற்கு 10 அழைப்புப் பணிகள் மட்டும் ).

இப்பிரிவில் சேவை செய்ய விருப்பமுள்ளவா்கள், பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினை இம் மாதம் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com