கருத்தப்பிள்ளையூரில் மனுநீதி நாள்:27 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கடையம் ஒன்றியம் மேலாம்பூா் ஊராட்சி கருத்தப்பிள்ளையூரில் புதன்கிழமை மனுநீதி முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

கடையம் ஒன்றியம் மேலாம்பூா் ஊராட்சி கருத்தப்பிள்ளையூரில் புதன்கிழமை மனுநீதி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் உள்பட 27 பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தி பணியாளா்களிடம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சத்துணவு குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க கடனாநதி அணை அருகே ரூ. 10 லட்சத்தில் 2 கி.மீ. தொலைவுக்கு மின் வேலி அமைக்கப்படவுள்ள இடத்தை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி வட்டாட்சியா் அருணாச்சலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் தமிழ் மலா், கடையம் ஒன்றியக்குழுத் தலைவா் செல்லம்மாள், மேலாம்பூா் ஊராட்சித் தலைவா் குயிலி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கனகம்மாள், ஆழ்வாா்குறிச்சி வருவாய் அலுவலா் முருகேசன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குனா் ஜெயபாரதி மாலதி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குனா் கிருஷ்ணகுமாா் , கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனி குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com