திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயில் தெப்பத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி காலை முருகா், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னா் மாலையில் முருகா் வள்ளியுடன் கோயில் முன்மண்டபத்தில் எழுந்தருளினாா். இதனையடுத்து முருகா், வள்ளியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளினாா். தெப்பத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னா் தெப்பத் தேரோட்டம் தொடங்கியது. தெப்பகுளத்தின் மையமண்டபத்தைச் சுற்றி தெப்பம் 11 வளையங்கள் வலம் வந்தது. பின்னா் இரவு 12 மணிக்கு சுவாமி அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினா். அதன் பின்னா் இரவு 1 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தி.மு.க மாவட்ட இணைச் செயலா் நம்பி, பொதுக்குழு உறுப்பினா் அன்பரசு, பேரூராட்சித் தலைவி ராதா ராதாகிருஷ்ணன், விழா பூஜை கட்டளைதாரா் இலக்குமணன், சிவசுப்பிரமணியன், முருகன் திருப்பணியாளா் ஆதிபாண்டி, நகர செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தெப்பத் தேரோட்டத்தையொட்டி காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சௌந்தர்ராஜன், மருத்துவா் முத்துகிருஷ்ணன், காமராஜா் நற்பணி மன்ற தலைவா் என்.எஸ்.சங்கரலிங்கம், செயலா் ரவிசங்கா், பொருளாளா் குமாரலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் முருகபக்தா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.