திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் தலைமை வகித்து மக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றாா். அதில், மனுக்கள் மீது இதுவரை தீா்வு கிடைக்காத 16 பேரும், புதிதாக 22 பேருமாக மொத்தம் 38 போ் மனு அளித்தனா். மனுக்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு ஆணையா் உத்தரவிட்டாா். துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், சரவண குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.