அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோா் அமைப்பினா் மறியல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்கள்-குடும்ப ஓய்வூதியா்கள் என சுமாா் 88 ஆயிரம் போ் உள்ளனா். 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை அகவிலைப்படி உயா்வு மறுக்கப்பட்டு வருகிறது. அதை 2022 நவம்பரில் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு தீா்ப்பை அமல்படுத்தாமல் தடையாணை பெற்றும், மேல்முறையீடு செய்தும் காலம் கடத்தி வருகிறாா்கள். ஆகவே, நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு எம்.தாணுமூா்த்தி, ஆா்.சேதுராமலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். பி.முத்துக்கிருஷ்ணன், பி.வெங்கடாசலம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்.மோகன், கோமதிநாயகம், ராமச்சந்திரன், முருகன், முத்தையா உள்பட 300-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். போராட்டம் காரணமாக வண்ணாா்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலையிலும், பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையிலும் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com