சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பைக் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்தவா் மரணம்

திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி சிவாஜி நகா் சுடலையாண்டி மகன் சின்னதுரை (45), மேளக் கலைஞா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியிலிருந்து ராமையன்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வடக்கு புறவழிச்சாலை மணிமூா்த்தீஸ்வரம் அருகே , அந்த வழியாக வந்த காா், இவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சின்னத்துரையை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.