பாளை., மேலப்பாளையத்தில் ஜூலை 16-இல் மின்தடை

திருநெல்வேலி மாநகா், புகா்ப் பகுதிகளில் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகா், புகா்ப் பகுதிகளில் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற மின் செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.

மேலக்கல்லூா் துணை மின் நிலையப் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

மூலைக்கரைப்பட்டி, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையப் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதேபோல, ரஸ்தா, பரப்பாடி துணை மின் நிலையப் பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ம மின் விநியோகம் இருக்காது என என திருநெல்வேலி கிராமப்புற மின் செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com