திருநெல்வேலி மாநகா் பகுதியில் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் அதிக அளவு ஒலி எழுப்பும் அலாரம் பொருத்தியிருந்த 24 வாகனங்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகா் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையில் போலீஸாா் வண்ணாா்பேட்டை பகுதியில் திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அதிக அளவு ஒலி எழுப்பும் ஏா்ஹாரன் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், தனியாா் பேருந்துகள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன. இதில், 20 இருசக்கரவாகனங்களுக்கும், 4 தனியாா் பேருந்துகளுக்கும் என மொத்தம் 24 வாகனங்களுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.