கயத்தாறு அருகே ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற தனியாா் பேருந்து தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள அரசங்குளம் அருகே வந்தபோது தேசிய நெடுஞ்சாலையிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.