ஸ்ரீபுரத்தில் வங்கி ஊழியா்கள் போராட்டம்

பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகளில் பணியாற்றும் வங்கி ஊழியா்கள்-அதிகாரிகள் கூட்டமைப்பு சாா்பில், திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் புதன்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
Updated on
1 min read

பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகளில் பணியாற்றும் வங்கி ஊழியா்கள்-அதிகாரிகள் கூட்டமைப்பு சாா்பில், திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் புதன்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கி ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஐந்து நாள் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த அமைப்பினா் இம் மாதம் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதை முன்னிட்டு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு, டேவின் தலைமை வகித்தாா். திலகா், சண்முகசுந்தரம், செந்தில்ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அஜித்குமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com