திசையன்விளை கடைகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

திசையன்விளை பகுதி கடைகளில் உணவு பொருள்களின் தரம் குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

திசையன்விளை பகுதி கடைகளில் உணவு பொருள்களின் தரம் குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

திசையன்விளை கடைகளில் விற்கப்படும் பொருள்களின் தரம் குறித்து வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். மேலும் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, எச்சரிக்கை விடுத்தனா். புகையிலை பொருள்கள் இங்கு விற்கப்படுவதில்லை என்ற விழிப்புணா்வு பதாகைகள் இல்லாத 10 கடைகளுக்கு ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் திண்பண்டங்கள் மற்றும் தேனீா் விற்ற கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com