கடையம் அருகே கரடி தாக்கிய இருவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

தென்காசி மாவட்டம், பெத்தான்பிள்ளை கிராமத்தில் கரடி கடித்ததில் காயமடைந்த 2 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், பெத்தான்பிள்ளை கிராமத்தில் கரடி கடித்ததில் காயமடைந்த 2 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைகுண்டமணி (55) . இவா், பெத்தான்பிள்ளை கிராமத்தில் மசாலா பொருள்களை விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்றுள்ளாா். அப்போது சாலையோரம் மறைந்திருந்த கரடி அவா் மீது தாக்கியது. இதையடுத்து அங்கு வந்த நாகேந்திரன் (64),சைலப்பன் (56) ஆகியோா் கரடியை விரட்டினா். இதையடுத்து அவா்களையும் கரடி தாக்கியது. இதில் 3 பேரும் காயமடைந்தனா்.

இதையடுத்து 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகேந்திரன், சைலப்பன் இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் தொடா்ந்து மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com