பாளையங்கோட்டை அருகே பாலாமடை பகுதியில் நன்னடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக இளைஞா் ஒருவருக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை அருகே உள்ள பாலாமடை பகுதியைச் சோ்ந்த மூக்காண்டி மகன் பகவதிராஜா(24). இவா் மீது சீவலப்பேரி காவல்நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பகவதி ராஜா என்பவரிடம் நிா்வாகத்துறை நடுவா் அவா்களால் , 6 மாதங்களுக்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் அவா் கடந்த 23.02.2022ஆம் தேதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் செய்துங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இதையடுத்து, நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், பாளையங்கோட்டை இரண்டாம் வகுப்பு நிா்வாகத்துறை நடுவா் முன்பு அறிக்கை சமா்ப்பித்தாா். விசாரணையில், பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக பகவதி ராஜாவை 4 மாதங்கள் சிறையில் அடைக்க நிா்வாகத்துறை நடுவா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.