மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 18-ஆவது ஆண்டு விழா மற்றும் 14-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 18-ஆவது ஆண்டு விழா மற்றும் 14-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் அலிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியா் அஷ்ரப் அலி பாகவி கிரா அத் ஓதினாா். அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு தலைவா் செய்யது அகமது தலைமை வகித்தாா்.

கல்லூரித் தாளாளா் குதா முகம்மது, அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு உறுப்பினா்கள் நிஜாமுதீன், காதா் மைதீன், அமனுால்லாஹ், காஜா நஜீமுத்தீன், முகம்மது ஹனீப் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பு பொருளாளா் ஜாபா் சாதிக் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ரஜப் பாத்திமா ஆண்டறிக்கை படித்தாா்.

இதில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவா் பீட்டா் அல்போன்ஸ் கலந்துகொண்டு, 295 இளங்கலை, 9 முதுகலை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

பாளை. சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, ஐக்கிய அரபு அமீரக வெளிநாடு வாழ் தமிழா்கள் இந்திய நலச் சங்க தலைவா் மீரான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com